• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

35 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வரும் தீவிர பக்தர்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், பாரத ரத்னாவுமான எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்த தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் தெருவைச் சேர்ந்த திரு. சண்முககனி என்பவர், எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றின் காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக அவரது பிறந்த நாளன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

இந்த நிகழ்வின் போது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திரு. மாதவன் மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி திரு. தர்மர் உள்ளிட்டோர் உடனிருந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வித தொய்வுமின்றி, தனது சொந்த முயற்சியில் சண்முககனி எடுத்து வரும் இந்த நெகிழ்ச்சியான காரியம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.