பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அதில்”தாயான பிறகும் தான் விரும்பும் கலையை தொடர ஆரோக்கியத்தை, அழகை காத்திட கடும் முயற்சியும், பயிற்சியும் செய்கிறார். பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை மனப்பாடம் செய்து onemore கேட்க ego வுடன் தயாராகிவிட்டு பின் அனைவரிடமும் அன்பொழுக புழகுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.