தேனி மாவட்ட குடிமக்கள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு சார்பில் தீண்டாமை ,வன்கொடுமைகள் குறித்த தொகுப்பு புத்தகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ. முரளிதரனை சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மாநில அளவில் பெறப்பட்ட தீண்டாமை மற்றும் வன் கொடுமைகள் குறித்த தொகுப்பினை 2020 ஆண்டு அறிக்கை புத்தகமாக வழங்கப்பட்டது.

மாநிலத்தில் வன்கொடுமைகள், தடுப்பு முறைகள், காவல்துறையின் செயல் திறன், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் செயல்பாடு,சிறப்பு நீதிமன்றங்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 2021 ஆகஸ்ட் 19-ஆம் நாள் நடைபெற்ற கூட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயல்பாடுகள், துறைகளுக்கு இடையேயான மதிப்பீடு மற்றும் தேசிய ஆணையத்தின் பரிந்துரைகள் போன்ற பல்வேறு தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

வன்கொடுமைகளை தடுப்பதற்கும் சமூக நீதியை பாதுகாப்பதற்கும் பயனுள்ளதாக பார்க்கப்படும் இந்த அறிக்கையை குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.முருகேசன்,மாவட்ட தலைவர் முத்து முருகேசன் மற்றும் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சின்னமாரி ஆகியோர் வழங்கினர்.

இதுகுறித்து இக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.முருகேசன் நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு சார்பாக 35 மாவட்டங்களின் தகவல் அரியும் உரிமை சட்டத்தின் படி தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை பெற்றுள்ளதாகவும் அதில் முதல் தகவல் அறிக்கை எத்தனை மாவட்டங்களில் பதிவாகியுள்ளது, எத்தனை வழக்குகள் நடைப்பெற்றது , எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா என்பதை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒரு தொகுப்பாக அந்த புத்தகத்தில் 2020 ஆண்டு அறிக்கையைாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு அறிக்கையை தேனி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்ததாக கூறினார்.பின் மாவட்ட ஆட்சியர் தான் ஏற்கனவே தீண்டாமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணயத்தில் இருந்ததாகவும் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாவட்ட தலைவர் முத்து முருகேசன், குழு உறுப்பினர்கள் சின்னமாரி, மாரியம்மாள் மற்றும் கலாவதி உடன் இருந்தனர்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]