அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் பாஸ்டனில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வெடி சத்தம் கேட்டு, மாணவர்கள் வகுப்பறையில் இருந்து பதறியடித்து ஓடினர். இந்த வெடி விபத்தில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் வெடிகுண்டு சிதறிய மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.