இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலின் 4 வது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் இமாச்சலில் உனா ரியில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்கிறது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3 வது ரயில் சேவையை குஜராத்தில் கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள குஜராத்,இமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.