பணவீக்கம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலை சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பணவீக்கம் தனக்கு பெரிய கவலை இல்லை என கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது… ” இந்தியாவின் சில்லரை பணவீக்கம் நேற்று 7% உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.62% உயர்ந்துள்ளது. இப்பொழுது கூட நிதியமைச்சர் பணவீக்கத்தை பற்றி கவலைப்பட வில்லை என்றால் அவர் சமானிய மக்களிடம் இருந்து விலகி இருக்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.