முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ரெய்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” குரங்கு கையில் பூமாலை போல இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எதிர் கட்சியினரின் குரலை நசுக்கும் தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சருக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை திசை திருப்ப மீண்டும் மீண்டும் நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை இது என்று விமர்சித்துள்ளார்.