ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா”(பாரதமே ஒன்றிணைவோம் ) நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ராகுல்காந்தி 3570கிமீ தூரத்தை தனது நடைபயணம் மூலம் மேற்கொள்கிறார்.தமிழகம்,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட 12 மாநிலங்கள் , 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் தேசியகொடியை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரையில் தமிழகத்தை சேர்ந்த 100 பேர் பங்கேற்றுள்ளனர்.