எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை அதிமுக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை செல்கிறார். கடந்த ஜூலை 11 ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுகுழுவின் போது மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதையடுத்து அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின் நீதிமன்றத்தின் உத்தரவுபடி மீண்டும் அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இபிஎஸ் மீண்டும் அலுவலகம் செல்ல இருக்கிறார்.