• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நித்யானந்தாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

Sep 7, 2022

நித்யானந்தாவின் உடல்நிலை மோசமானதிற்கு காரணம் அவருக்கு விஷம் கொடுக்கபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக சொல்லப்படும் நித்யானந்தா, தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அவரது வீடியோக்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவருக்கு ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி அவரது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே மருத்துவ சிகிச்சை பெற இலங்கை அரசிடம் அனுமதி கேட்டதாக தகவலும் வெளியானது.