• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை ..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்திருப்பது வீர ஆஞ்சநேயர் கோயில் ஆகும். பழமை வாய்ந்த இத்து திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த மாதம் 11-ம் தேதி குடமுழுக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 48 நாட்களும் கோவில் திறந்து வைக்கப்பட்டு, தினந்தோறும் அபிஷேகங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது .இந்நிலையில் நேற்று 48 வது நாள்விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்தவுடன் ஆஞ்சநேயர் சிறப்புவழிபாடு செய்யப்பட்டது .தொடர் iந்து ஆஞ்சநேயருக்கு பால் ,பழம், தயிர் ,வெண்ணெய் ,தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது .இதில் .ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.