• Sat. Apr 27th, 2024

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்…

Byகாயத்ரி

Aug 13, 2022

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். பின்னர் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் அடுத்த மூன்றாவது நாளில் காலை 10 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் சென்றடையும்.

அதனைப்போலவே கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.அங்கிருந்து வரும் 28ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த 3வது நாளில் அதிகாலை 4 மணிக்கு வாஸ்கோடகாமா செல்லும். பின்னர் வாஸ்கோடகாமாவில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *