அரிசி ,கோதுமை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சில்லரையாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு 5% வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.அதன் படி பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற் கப்படும் அரிசி,மைதா,ரவை ,தயிர் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது .கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு எல்லாம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதால் கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.