• Tue. Apr 30th, 2024

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி

ByA.Tamilselvan

May 13, 2022

மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குசட்டமன்ற உறுப்பினர்ஏஆர்ஆர் சீனிவாசன் நீதியுதவி வழங்கினார்.
விருதுநகர் ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியாபட்டி கிராமத்தில் எம்..சோலை என்பவரின் வீட்டில் நேற்று மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் அவரது இல்லம் முழுமையாக சேதமடைந்தது. இத்தகவல் அறிந்து விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் . எ.ஆர்.ஆர்.சீனிவாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 15000/- நிதியுதவி வழங்கினார். உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் திருமதி. சுமதி ராஜசேகர், சுதாகர், தொமுச ராஜசெல்வம், ரவிகுமார், ராமசந்திரன், பூபதி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *