• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி

ByA.Tamilselvan

Apr 25, 2022

மதுரை மாவட்ட கலெக்டர் அலுலகம்முன்பு உடல்முழுதும் மண்ணெய்ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒருவர் 3 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றிய தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது