சிந்தனைத் துளிகள்
• ஒரு நாள் அனைத்தும் மாறும் என்று காத்திருக்காமல்..
இன்றே முடியும் என முயற்சி செய்
வேதனைகளும் வெற்றிகளாக மாறும்.
• வானவில் தோன்றும் போது வானம் அழகாகின்றது..
உன்னில் தன்னம்பிக்கை தோன்றும் பொழுது வாழ்க்கை அழகாகின்றது.
• ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையின் வெற்றிக்காக போராடு..
ஆனால் அந்த வெற்றியில் பிறரின் துன்பங்கள் மட்டும் இருக்க கூடாது..
என்பதில் தெளிவாக இரு.
• இந்த உலகில் மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் அனைவரும்..
பல தோல்விகளையும் துன்பங்களையும் கடந்து வந்தவர்களே.
• தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே..
மனதில் எப்போதும் உறுதி வை..
நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய்..
கனவுகள் நனவாகும் காலம் வரும்.