• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதமாற்றம் செய்வோரை தண்டிக்க மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் சிவசேனா கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், தமிழகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அவமதித்தும், இந்து விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், இந்து திருக்கோவில்கள் இடிப்பவர்கள், இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மிளகாய் அரைத்து வழிபட்டனர்.

தமிழகத்தில் இம்மாதிரியான சம்பவங்களை தவிர்க்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.