• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

டீ சாப்பிட்டு பொழுதை கழிக்கும் திமுக..எடப்பாடி பழனிசாமி விளாசல்…

Byகாயத்ரி

Feb 7, 2022

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றபோது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக என்றாலே ஒரு தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களே கூறியுள்ளார்.

அந்த தீய சக்தியை ஒழிப்பதற்கு தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்தார்கள். அண்ணாதிமுகவை அழிக்க வேண்டும் உடைக்க வேண்டும் என்று எங்கள் நிர்வாகிகள் மீது பொறுப்பாளர்கள் மீது திமுக அரசு பொய்யான வழக்குகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்து தற்போது வரை அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த பொய்யான வழக்குகளை சந்திக்கும் திராணி அண்ணா திமுக தொண்டர்களுக்கு உண்டு. திமுக அரசு போடும் பொய் வழக்குகளை கண்டு அண்ணா திமுக நிர்வாகிகள் பயப்பட மாட்டார்கள்.

புரட்சித்தலைவி அம்மா இருக்கும் போதே அவரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் .சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இழிவு படுத்தினார்கள் தாக்கினார்கள். அந்த நேரத்தில்கூட துணிவோடு இருந்து இந்த கட்சியை காப்பாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த இரு பெரும் தலைவர்களின் வழியில் அண்ணா திமுக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். யாரோ ஒருவர் யாருக்கோ வேலை வாங்கி தருவதாக ரூபாய் வாங்கினாராம். அவர் இவரிடம் கொடுத்ததாக கூறியதாக சொல்லி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படி பொய்யான வழக்குகளை பதிவு செய்து அச்சுறுத்தி தேர்தல் பணிகளை செய்ய விடாமல் திமுக அரசு தடுக்கின்றது .

திமுக அரசு எவ்வளவு பொய்யான வழக்குகளை போட்டாலும் மிரட்டினாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி இந்த தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள். திமுக போல் சொகுசான வாழ்க்கையை அண்ணா திமுக தொண்டர்கள் வாழவில்லை. உழைக்காமல் இருக்கும் உங்களுக்கு இவ்வளவு இருக்கின்றது என்றால் உழைத்துப் பிழைக்கும் எங்கள் அண்ணா திமுக தொண்டர்களுக்கு எப்படி வீரம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். திமுகவின் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை. கடந்த 8 மாதத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடைக்கின்றது. எங்கே பார்த்தாலும் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் சைக்கிளில் சென்று டீக்கடையில் டீ சாப்பிட்டு பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கின்றார். ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் அவரது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்று விளாசினார்.