• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 3, 2022

சிந்தனைத் துளிகள்

• பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.
பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.

• உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.
ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.

• உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள்.
அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

• உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம்.
ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.

• உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு.
சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ
உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *