சிந்தனைத் துளிகள்
• அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான்.
அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள்.
• பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.
உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.
• பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது.
• கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்,
யாருக்கும் கொடுக்கலாம். ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும்,
மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.
• உங்கள் மனம் புத்திக் கூர்மையும் தந்திரமும் கொண்டது. உங்களுக்கு ஒன்றில் சலிப்பேற்பட்டதும் இன்னொன்றை அது நாடச் செய்யும்.