• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆனைமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஆனைமலை முக்கோணத்தில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எம்எல்ஏ அமுல் கந்தசாமி

ஆனைமலை முக்கோணத்தில் இன்று எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஆனைமலை ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜிகே சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரிவாசு, ஆனைமலை நகர செயலாளர் ராஜேந்திரன், கம்பாலபட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மற்றும் அதிமுக கழக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.