• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்…,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் குடிநீர் வீணாக வயல்களுக்குள் செல்கிறது இன்று காலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் மாலை வரை உடைப்பை அதிகாரிகள் சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக குழாயிலிருந்து குடிநீரானது மலமளவென வெளியேறி அருகில் உள்ள சாலை மற்றும் வயல்களுக்குள் குடிநீர் சென்றது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வைகையில் நீர்மட்டம் குறைந்து வைகை அணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் சோழவந்தான் மேலக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வைகை ஆற்றுப்பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் தான் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் நகராட்சிக்கு செல்லக்கூடிய இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராத நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வயல்களுக்குள் சென்றது. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் வீணாக சென்ற குடிநீரை சரி செய்து குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குடிநீர் வெளியேறி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதை பார்த்தாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர்.