மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல், வாழ்நாள் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கியதற்காக கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி அவர்களை பாராட்டி முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் தினேஷ்குமார் பாராட்டுக் கேடயம் வழங்கினார்.

துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் சந்தான கிருஷ்ணன், நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் சரிதா ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





