பழநியில்- விவகாரம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், சத்திரப்பட்டி, வடமதுரை ஆகிய 4 பத்திரப்பதிவு அலுவலகங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலம் மோசடியாக பதிவு செய்த அதே நாளில் பழனியில் ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக மேலும் ஒரு புகார் எழுந்தது. தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது சில புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து சார் பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பனிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள உதவி பத்திர பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தலைமையிலான சிறப்பு அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் சத்திரப்பட்டி, வடமதுரை ஆகிய 4 பத்திர பதிவு அலுவலகங்களுக்கு 4-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து சென்று அனைத்து ஆவண பதிவுகளையும் ஆய்வு செய்து முறைகேடு நடந்துள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




