பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள ‘கங்கா மருத்துவமனையில்’ அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்து உள்ளனர்.

நடிகர் ராம் சரண் தனது புதிய திரைப்படப் படப்பிடிப்பில் நடித்து வந்த போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காகக் நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணைக் கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
அறுவை சிகிச்சையின் போது உடன் இருப்பதற்காகத் தந்தை சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கோவை வந்து உள்ளனர்.




