விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலாண் மறை நாடு கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் . சிவகுமார் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவ முகாம், நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலாண் மறைநாடு நாடார் உறவின்முறை தலைவர் ஜோசப் செல்வராஜ், முன்னாள் நாடார் உறவின் முறை தலைவர் வேல் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





