கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் ஆட்சியமைத்து தற்போது அமைச்சரவை முழுமையாக விரிவுபடுத்தபட்டுள்ளது. இன்னிலையில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கபட்டு திறக்கபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்நிலையில் இன்று கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பிக்கபட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் சம்பத்.





