திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் சுக்காம்பட்டி கருமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதி உள்ளது.

இங்கு வருகின்ற சித்திரை மாதம் 18ம் நாள் பௌர்ணமியை முன்னிட்டு 01.05.2026 (வெள்ளிக் கிழமை) அன்று சிறப்பு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற நடைபெற உள்ளது.

சித்திரை பெளர்ணமி விழாவிற்கு அனைத்து பக்தர்களும் தவறாது கலந்துகொண்டுஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஐயாவின் அருள்ஆசி பெற அனைவரையும் வருகை தருமாறுகருமலை சமஸ்தானம் கருமலை நிர்வாகி என்.எஸ்.கே.சரவணக்குமார் ( செல் எண் 95789 91606)
மற்றும் நிர்வாகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பௌர்ணமி தினத்தன்று மட்டும் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 12.30 மணிக்கும் வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருந்து கருமலைக்கு இலவச பேருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




