தோப்பூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உறுதியாக கொண்டு வருவேன்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்னதை செய்தார் ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகையை சொன்னது போல் அனைவருக்கும் கொடுத்தார்
அதேபோன்று 2026 சட்டமன்ற தேர்தலில் நிறைய வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறார் நிறைய திட்டங்களை வைத்து இருக்கிறார்
மகளிர் உதவித்தொகை 1000 ஆக இருந்ததை 2000 ரூபாயாக தர இருக்கிறார்
வீட்டில் இருக்கும் பெண்களை வேலைக்கு போகாமல் இருக்கும் பெண்களை சும்மா இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்
வேலைக்குப் போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் வேலைப்பளு அதிகம்.
அந்த அனைத்து வேலைகளையும் செய்த பெண்களுக்கு கிடைக்கப்பட்ட பெயர் சும்மா இருக்கிறார் என்பது

அவர்கள் சும்மா இருக்கக் கூடாது என்று தான் உரிமைத் தொகையை ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் அதனை 2000 ஆக வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறார்.
மகளிர் சுய உதவி குழு வைத்திருப்பவர்கள் ஐந்து லட்ச ரூபாய் கடன் உதவி தொகை வழங்கப்படும்.
பள்ளிக் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர்.
பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை உயர்த்தி இருக்கிறார்.
தோப்பூர் மந்தை கிராம மக்களுக்கு செல்லியம்மன் கோவில் கம்மாக்கரை உள்ள காலி இடத்தில் செட் ஒன்று அமைத்து தர இருக்கும் கம்மாய்களில் மீன்பிடி வசதி அமைத்து தரப்படும் மின்விளக்கு வசதி அமைத்து தரப்படும்
தோப்பூர் கிராமத்திற்கு பேருந்து நிறுத்தம் கண்டிப்பாக கொண்டு வருகிறேன் என்று உறுதி அளிக்கிறேன். அனைத்து தெருக்களுக்கும் தார் சாலைகள் அமைத்து தருவேன்.

இந்த கிராமத்திற்கு என ஒரு நாடகம் மேடை அமைத்து தரப்படும் இங்கு உள்ள அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லைமாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்
100 நாள் வேலை வாய்ப்பை நிறுத்தியது பாஜக அரசின் மோடி உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு 100 நாள் வேலையை எதற்காக நிற்கிறீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும்
திமுகவும் அதிமுகவும் தான் தற்பொழுது உள்ள தேர்தலின் நேரடியாக களம் சந்தித்து உள்ளோம்
திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சாலை வசதி குடிதண்ணீர் வசதி தெரு விளக்கு கழிவுநீர் சாக்கடை வசதி போன்றவை குறையாகவே உள்ளது அதை நான் நிச்சயமாக அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என கிருத்திகா தங்கப்பாண்டியன் கூறினார்.




