எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா கதை வசனம் எழுதி தயாரித்துஅலையோடு விளையாடு எனும் படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர் “கோகினூர்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
படத்தில் ஐந்து பாடல்களுடன மூன்று சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது

படத்தில் இயக்குனர் பகவான் பாவேந்தர் எழுதிய கோகினூரு கோகினூரு அதிசயமே… என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் படக் குழுவினர்.
கர்நாடகாவிலுள்ள மைசூரிலும் அங்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் 45 நாட்களில் ஒரேக்கட்ட படப்பிடிப்பாக திட்டமிடப்பட்டு இடைவிடாது நடைபெற்றுவருகிறது.
ஜீவா,நவீன், ஹிமா, தனு பிரசாத், பாவனா,ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன்,ரவி ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு- ராஜா சிவசங்கர்.
பாடல்கள்- பகவான் பாவேந்தர்,டி.எஸ் திவாகர்.
இசை -டி.எஸ் திவாகர்.
நடனம்- கிஷோர்.
சண்டை பயிற்சி – சுப்ரீம் சுப்பு.
மக்கள் தொடர்பு-வெங்கட்.
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரவி.
இணைத் தயாரிப்பு – ஜி.பிரியதர்ஷன்.
கதை வசனம் தயாரிப்பு- ராஜம் ஆர்.இ கஜேந்திரா. திரைக்கதை இயக்கம் – பகவான் பாவேந்தர்.




