• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சட்டவிரோத எரிபொருள் விற்பனை அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு..,

ByPrabhu Sekar

Mar 26, 2026

சென்னை அடுத்த தாம்பரம் அருகிலுள்ள எருமையூர் புதிய பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு வரும் கயலான் கடையில், உரிமையாளர் குமார் உதவியுடன் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி, அனுமதி இல்லாமல் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தினசரி நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணம் செய்கிறார்கள். அவசர தேவைகளுக்காக சிலர் இந்த கடையை அணுகி எரிபொருள் வாங்கும் நிலையில், விதிமுறைகளை மீறி நடைபெறும் இந்த விற்பனை பாதுகாப்பு ரீதியாக மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடியவை. அவற்றை உரிய பாதுகாப்பு விதிமுறைகள் இன்றி சேமித்து விற்பனை செய்வது அருகிலுள்ள மக்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலை சட்டவிரோத செயல்களுக்கு துணைபுரியும் வகையில் உள்ளது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேலும், TN 12 BE 4065 என்ற வாகனத்தில் இருந்து டீசல் எடுக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவத்தின் தீவிரத்தையும் உறுதிப்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதமாக நடைபெறும் எரிபொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுமானால், எதிர்காலத்தில் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.