• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தினுள் தையல் இயந்திரங்களுடன் கண்டைனர் லாறி.!?.

தனியார் பார்சல் சர்வீஸ் கண்டைனர் லாரி நிறைய வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு கொடுக்க வந்துள்ளது என்ற கேள்வியோடானான பரபரப்பை பற்றவைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில். ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு வந்துள்ளது என்ற கேள்வி எழும் நிலையில்.

சென்னையில் இருந்து நாகர்கோவில் வரையில் சாலைபயணத்தில் இந்த கண்டைனர் லாறியை எந்த சோதனை சாவடிகள்,சாலை ஓரங்களில் சிறப்பு
சோதனை செய்யும் அதிகாரிகளின் கண்ணில் இந்த கண்டைனர் லாறியை எவரும் ஏன் சோதனைக்கு ஆட்படவில்லை என்பது ஒரு அதிசயம் என்ற நிலையில்.

ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் கண்டையனர் லாறி தையல் இயந்திரங்களுடன் வந்திருக்கும் செய்தி அறிந்த. அ.தி.மு.க., பாஜக,தவெக நிர்வாகிகள், ஆட்சியர் அலுவலகம் வந்து குறிப்பிட்ட கண்டையெனர் லாறியை திறந்து, வந்திருப்பது தையல் இயந்திரங்கள் தானா? அல்லது பணமா? என கேள்வி எழுப்பினார்கள்.

பார்சல்களை திறந்து பரிசோதிக்கப்பட்டது. தையல் இயந்திரங்கள் தான் என்று உறுதி செய்தபின். கண்டெய்னர் லாறி ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டது.

இரண்டு மணிநேரம் பரவிய பரபரப்பு அடங்கிய நிலையில். அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது.

தேர்தல் வாக்குகள் எண்ணி, தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைப்பின் தான். சம்மந்தப்பட்ட கண்டெய்னர் லாறி சீல் வைத்த நிலையிலே ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நிற்கும் என்பதே இப்போதைய நிலை.