திண்டுக்கல் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செம்பட்டி பழனி ரோடு சாலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாகி வருகிறது பல முறை சொல்லியும் அதிகாரிகள் யாரும் சரி செய்யவில்லை.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வரும் குடிநீர் தினம்தோறும் பொதுமக்களுக்கு பயனில்லாமல் சாலையில் கழிவு நீராக செல்வதால் பொதுமக்கள் வேதனை
அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.




