• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Dec 27, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை ,நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில், இறவார்பட்டியில் செல்லியம்மன் கோவில், நடு சத்திரம் கிராமத்தில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.