• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பதிவுத்தபால் அனுப்பிய வழக்கறிஞர்கள்..,

ByS.Ariyanayagam

Dec 16, 2025

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி பதிவு தபால் அனுப்பினர். திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பழைய நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் சென்றனர்.

E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு பதிவு தபால்கள் அனுப்பினர் இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்