• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் நினைவு நாள்..,

ByPrabhu Sekar

Dec 6, 2025

சமத்துவம், சமூக நீதி, மனித உரிமைக்காக வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமைத்துவமாக மார்க்கெட் ஞானப்பால், தேமுதிக தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறப்பு அழைப்பாளராக மா. செழியன், செங்கல்பட்டு மாவட்ட துணை செயலாளர் மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு பகுதி பொருளாளர் ஜார்ஜ், தெற்கு பகுதி செயலாளர் கேட் தர்மா, மத்திய பகுதி செயலாளர் என்.ஆர். ஆனந்த், மேற்கு பகுதி நிர்வாகிகள் பழனிவேல், 60-வது வட்ட செயலாளர் ராகவன், நிர்வாகிகள் ஏழுமலை, சதீஷ், வட்ட செயலாளர்கள் காந்தி, யூனக் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாம் அனைவரும் அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றி சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என நிகழ்வில் உறுதியேற்கப்பட்டது.