• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நடமாடும் காய்கனி வண்டியை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

ByRadhakrishnan Thangaraj

Nov 14, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊழவர் சந்தை வாளகத்தில் இராஜபாளையம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு 2.10,000 ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் காய்கனி வண்டியை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் வழங்கினார்கள் .

அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் உழவர் சந்தையும் பார்வையிட்டு விவசாய பெருமக்களுடன் காய்கறி விளைச்சல் குறித்தும் வியாபாரம் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவி கேட்டறிந்தனர் .
பின்பு மாடிதோட்டத்தின் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்கள் .

இந்கழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா உழவர் சந்தை அலுவலர் கங்காதரன் கழக நிர்வாகிகள் பிரபு நாகேஷ்வரன் மாயாவிமுருகேசன் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.