• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சாலையில் தேங்கிய மழைநீர்..,

ByKalamegam Viswanathan

Nov 9, 2025

மதுரை சிவகங்கை சாலையில் கோமதிபுரம், ஆறாவது மெயின் ரோடு சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி அடைகின்றனர். மதுரை சிவகங்கை கருப்பா யூரி செல்லும் சாலையில் பல இடங்களில், மழை காலங்களில் நீர் குளம் போல தேங்குகிறது.

மேலும், கருப்பாயூரணி கண்மாய் அருகே சாலையில் தொடர்ந்து நீர் தேக்கி வருவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர், சாலையில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்து பலத்த காயமடைவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி பொறியாளர், ஆணையாளர் , உடனடியாக பார்வையிட்டு சாலையில் குளம் போல தேங்கிய மழைநீரை அகற்றுவதுடன், பள்ளங்களை சீரமைக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.