விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் யோகராஜ் இவரது மகன் ஜெயச்சந்திரகுமார் வயது 28 இவர் நேற்று மாலை 6 : 30 மணி அளவில் அங்குள்ள அணை அருகே உள்ள கால்வாயில் மூன்று பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் .

தகவல் தெரிந்த சூலக்கரை போலிசார் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்குஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த கொலையை செய்ததாக அதே முகாமை சேர்ந்த நித்யகுமார்,வயது 21. கோகிலரமணன் வயது 21,மற்றும் சஞ்சித் வயது 21 ஆகிய மூவரையும் கைது செய்து இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்