பொதுவுடமை தலைவர் தோழர் திரு.ஜீவானந்தம் (ஜீவா )அவர்களின் 119 – வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் நாகர்கோவில் ஜீவா மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் மாவட்ட ஆட்சி தலைவர், மாநில,மாநகர பகுதி வட்ட செயலாளர்கள் அணிகளின் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









