செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சாலையில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம்,ரம்யா தம்பதியர்.
சுப்பிரமணியம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில்,அவரது மனைவி ரம்யா ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இவரது வீட்டின் அருகாமையில் உள்ள KK சிக்கன் கடைக்கு சென்று சுப்பிரமணியன் சிக்கன் வாங்க சென்ற போது அப்பொழுது பாஜக பிரமுகர் பழனிவேல் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.
அப்பொழுது தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் பாஜகவில் பீரக்கண்காரணை இரும்பூலியூர் பகுதி பொறுப்பாளராக பதவி வகித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியம் மீண்டும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளிநாடுக்குச் சென்றுள்ளனர்.
அப்பொழுது சுப்பிரமணியத்தினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாஜக பிரமுகர் பழனிவேல் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வாங்கி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜயலட்சுமி கணேஷ் என பலரை அறிமுகம் செய்து ஆக மொத்தம் 60 லட்சம் வரை பழனிவேல் பணத்தை மோசடி செய்து உள்ளார் .
தொடர்ந்து ஏமாற்றி வந்த நிலையில் ரம்யா நேரடியாகவும் தொலைபேசி மூலமாக பழனிவேலிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அப்பொழுது பாஜக பிரமுகர் பழனிவேல் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை ரிஜிஸ்டர் செய்து தருவதாக கூறி மணிமங்கலம் அருகே ஒரு இடத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
கொடுத்த இடத்தை பார்த்தபோது அது அரசு இடம் என்பதும்,புறம்போக்கு இடம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தான் ஏமாந்ததை அறிந்த ரம்யா பலமுறை நேரடியாகவும் மற்றும் தொலைபேசி மூலமாகவும் பணத்தைக் கேட்டுள்ளனர். பணத்தை தராமல் மிரட்டி வந்த நிலையில் ரம்யா தனது கணவரை வெளிநாட்டிலிருந்து வரவைத்து நேரடியாக பீர்க்க்கன்காரணை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உள்ள பாஜக பிரமுகர் பழனிவேலை சந்தித்து தர வேண்டிய பணத்தை கேட்டபோது பணத்தை தராமல் அலுவலகத்தில் இருந்த கூட்டாளிகளை வைத்து ரம்யா கண் முன்னே கணவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் ரம்யா ஆசிரியர் என்பதை பார்க்காமல் அசிங்கமாக பேசி கழுத்தை பிடித்து வெளியே அனுப்பி வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரம்யா பாஜக பிரமுகர் பணம் தராமல் தங்கள் குடும்பத்தை மிரட்டி வருவதாக புகார் அளித்தார்.
ரம்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தோடு அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த போதிலும் பாஜக பிரமுகர் பழனிவேலை காவல்துறையினர் கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட ரம்யா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிற நிலையில் தான் தனியாக இருப்பதை பார்த்த, பழனிவேல் ,ஆதரவாளர்கள் தொடர்ந்து தான் இருக்கும் இடத்தை தொடர்ந்து நோட்டமிட்டு வருவதாகவும் , தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் பழனிவேலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் நேரடியாக சென்று பணத்தைக் கேட்டபோது பழனிவேல் ஆதரவாளர்கள் பெண் என்று பாராமல் பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு காவு கொடுத்து விடுவோம் என மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் பாஜக பிரமுகர் பிரமுகர் பழனிவேலை தேடி வந்த நிலையில் சுதந்திர தினம் அன்று சுதந்திரமாக தேசிய கொடியை பழனிவேல் ஏற்றி இருப்பதாக ரம்யா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.