• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,

ByK Kaliraj

Jun 1, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளனர்.

கட்டுமான பணிக்கு தேவையான நன்கொடை வழங்க வேண்டும் என திருப்பணி குழு கமிட்டியினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் நேரில் தெரிவித்தனர்.

அதன்பேரில் கோவில் கட்டுமான பணிக்கு ரூபாய் 50,000 உடனடியாக நன்கொடையாக வழங்கி திருப்பணி வேலைகளை சிறப்பாக செய்யுமாறு கோவில் நிர்வாகிகளிடம் கூறினார்.