• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அம்மா பேரவை சார்பில் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை..,

ByKalamegam Viswanathan

May 9, 2025

நரேந்திர_மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா “Operation Sindoor” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில் அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவ படைகளுக்கு, நமக்காக எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்காக ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் வெற்றி பெற்றிடவும் பிறந்தநாள் காண்கின்ற வர எடப்பாடியார்
மேலான வழிகாட்டுதலின்படி திருக்கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 82 மாவட்டங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்கின்ற சர்வ சமய பிரார்த்தனை கழக அம்மா பேரவை சார்பில் நடைபெறுகிறது.

நம் உயிரினும் மேலான தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்காக உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகள் மேற்கொள்கின்ற சிறப்பு பிரார்த்தனை அன்னதானம் நலதிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அந்த இடத்தில் மாவட்ட பேரவை செயலாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள உள்ள விவரங்களை விளம்பர போர்டாக அவசியம் வைத்திட அன்புடன் வேண்டுகிறேன்.என
RB உதயகுமாமர் அறிக்கை வெளியிட்டார்.