முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர்
S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

வழக்கறிஞர் A.R.சந்திரசேகர் அவர்கள், உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது அதிமுக மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.