• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது..,

ByArul Krishnan

Apr 1, 2025

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பன்னை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் போலீசார் வருவதை கண்டதும் நேற்று தப்பி ஓடிய நிலையில்நேற்று நவீன் ராஜ் மற்றும் கார்த்திக் ராஜா இருவரை கைது செய்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 3தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடி வந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மதம் சக்திவேல் வயது 27 மற்றும் மற்றும் அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அஜித் வயது 24 மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அரவிந்த் வயது 30 மற்றும் மா பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் வடிவேல் பிள்ளை வயது 28 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.