• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

ByK Kaliraj

Mar 28, 2025

விருதுநகர் மாவட்டம். இமானுவேல் சேகரனார் சிலை அமைக்க முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நிதி வழங்கினார்.

மம்சாபுரம் பேரூராட்சியில் அமைச்சியார்பட்டி கிராமம் உள்ளது. இங்கு
சுதந்திர போராட்ட வீரர், சமூகநீதிப்போராளி தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் திருவுருவ சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சிலை அமைக்க நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி .ராஜேந்திர பாலாஜியிடம் சிலை அமைப்பு கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில். ரூபாய் இரண்டு இலட்சம் நிதியுதவி வழங்கி இம்மானுவேல் சேகரன் சிலையை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.