• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா – கண்டறியும் கும்பலின் தலைவன் கைது

ByArul Krishnan

Mar 27, 2025

வேப்பூரில் காரில் வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலின் தலைவன் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலை, சேலம் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாகி இருந்த

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் முருகேசன் வயது 46 மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மங்களூர் அருகே உள்ள கச்சிமைலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி மாலதி வயது 38 இரண்டு பேரையும் கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.