• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்பு வலுவானது- அதிபர் ட்ரம்ப்!

ByP.Kavitha Kumar

Feb 14, 2025

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மிகவும் வலுவானது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், “ பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்க நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை, பின்னர் அமெரிக்கா வரை செல்லும், எங்கள் கூட்டாளிகள், சாலைகள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்களை இணைக்கும். இது ஒரு பெரிய வளர்ச்சி. இதற்கு நிறைய பணம் செலவிடப்பட உள்ளது, நாங்கள் ஏற்கெனவே சிலவற்றைச் செலவிட்டுள்ளோம், ஆனால் முன்னேறி தலைவராக இருக்க நாங்கள் இன்னும் நிறைய செலவிடப் போகிறோம். இன்றைய அறிவிப்புகளுடன், அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மிகவும் வலுவானது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,

ஐஎம்இசி இந்தியாவை வளைகுடா பிராந்தியத்துடன் இணைக்கும் கிழக்குப் பாதையையும், வளைகுடா பிராந்தியத்தை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்குப் பாதையையும் கொண்டுள்ளது. இதில் ரயில் மற்றும் கப்பல்-ரயில் போக்குவரத்து வலையமைப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து வழிகள் அடங்கும். 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது, ​​இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐஎம்இசி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஆண்டு தொடங்கி, இந்தியாவிற்கு ராணுவ விற்பனையை பல பில்லியன் டாலர்களால் அதிகரிப்போம். இறுதியில் இந்தியாவிற்கு எஃப் 35 ஸ்டீல்த் போர் விமானங்களை வழங்குவதற்கு நாங்கள் வழி வகுக்கிறோம். 2017-ம் ஆண்டில், எனது நிர்வாகம் குவாட் பாதுகாப்பு கூட்டாண்மையை புதுப்பித்து மீண்டும் உயிர்ப்பித்தது. பிரதமரும் நானும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையே வலுவான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு, அமைதியைப் பேணுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்கா இருப்பதை உறுதி செய்யும். எரிசக்தி தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் நானும் பிரதமர் மோடியும் எட்டினோம். அமெரிக்க அணுசக்தித் துறைக்கான புரட்சிகரமான வளர்ச்சியில், இந்திய சந்தையில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை வரவேற்கும் வகையில் இந்தியா சட்டங்களை சீர்திருத்துகிறது. வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்க உதவுவதற்கு நாங்கள் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.