• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம்…

ByKalamegam Viswanathan

Jan 28, 2025

மதுரையில் மாணவிகள் , பெண்கள் மீதான பாலியல் முறையீடுகளை காண்காணிக்க மாநகர காவல் துறை மூலம் “போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம். மதுரை மாநகர காவல் துறை சார்பில் “போலீஸ் அக்கா ” திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு.

மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் “போலீஸ் அக்கா ” திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கருமுத்து கண்ணன் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார் .

மாநகர காவல் துணை ஆணையர்கள் அனிதா, இனிகோ திவ்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மதுரை மாநகரில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “போலிஸ் அக்கா” திட்டம் தொடங்கப்பட்டது.

தான் இந்த போலீஸ் அக்கா திட்டம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் வகையிலும் இந்த திட்டம் மதுரை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 230 பள்ளிகள் மற்றும் 33 கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ்க்காணும் 95 பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர் . பயிற்சி பெற்ற காவலர்களின் கைபேசி எண் மற்றும் விபரங்களை அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் தெரிவிக்கப்படும். பெண் காவலர்கள் வாரத்திற்கு ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வந்து ஆய்வு செய்வார்கள்.

காவலர்கள் பெண் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெண் குழந்தைகள் கொடுக்கும் புகார்களை ரகசியமாக வைத்துக்கொண்டு அதனை சட்ட ரீதியாக என்ன வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்துவார்கள்.

மேலும் ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் புகார் பெட்டியில் வைக்கப்படும் மாணவிகள் தொல்லை தொடரபாக நேரடியாக சொல்ல தயங்கும் விஷயங்களை அந்த புகார் பெட்டியில் மாணவிகள், பெண்கள் தெரிவிக்கலாம்.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவலன் செயலியை அனைத்து கல்லூரி மாணவிகளும் உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு அவசர காலத்தில் உதவி செய்யும் .

மேலும் மதுரையில் 95 க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் உள்ளன ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டு நீங்கள் அழைத்தால் உடனடியாக அவர்கள் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.

” போலீஸ் அக்கா ” திட்டம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் போலீசார் பங்கேற்றனர்.