• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரையில், இளைஞர்கள் போதையில் அட்டூழியம் – 50க்கும் மேற்பட்ட வாகனம் சேதம்.

ByKalamegam Viswanathan

Sep 29, 2024

மதுரை சிந்தாமணி பகுதியில் மேட்டு தெரு புஞ்சை, குருநாதர் கோவில் தெரு, நடுத்தெரு காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சுற்றி திரிந்த நான்கு இளைஞர்கள் போதையில் வாலுடன் தெருக்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்கள் கொண்டு அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். இளைஞர்களின் வெளிச்செயலால் ஐந்து ஆட்டோ ஒரு சரக்கு வாகனம் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கண்ணாடி முகப்பு ஆகியவை சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு 2 லட்சத்திற்கு மேல் ஆகும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சமூகவிரத செயலால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழத்துறை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தன.